திரையரங்கங்களில் 50 % இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி படங்கள் வெளியாகலாம் என்றிருந்த நிலையில். பொங்கல் விடுமுறையை ஒட்டி பல படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர் பார்த்தனர்.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் காரணமாக படம் வெளியாவது சிக்கல் ஏற்படும் என்பதால் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் ரிலீஸ், தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த ட்விட்டர் பதிவில், ‘தற்போதுள்ள கோவிட் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எங்களின் ராதே ஷ்யாம் ரீல்ஸை ஒத்தி வைக்கிறோம். ரசிகர்களின் அளவு கடந்த அன்பிற்கும், ஆதரவிற்கும், எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்’ என தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

Tweet:


Share:

administrator